இந்தியாவில் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமில்லா விசா – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் சுற்றுலா விசா வழங்க ஆரம்பிக்கும் போது முதல் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வாங்காமல் விசா வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கட்டணமில்லா விசா:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பல முக்கிய திட்டங்கள் குறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், தொழிலாளர்களுக்கு PF சலுகை 2021 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தனியார் மயமாக்கப்படும் இரண்டு வங்கிகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சுற்றுலா விசா வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம், சுமார் 31 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வருவாய் கிடைத்துள்ளது. அவர்கள் இந்தியாவில் 21 நாட்கள் தங்குகின்றனர். இவர்கள் தினமும் இந்திய மதிப்பில் 2,400 ரூபாய் அளவுக்கு செலவு செய்கிறார்கள். இதனால் உள்நாட்டு பொருளாதாரத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் உதவியாக இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
எனவே நிலைமை சரியான பின்னர் இந்தியாவில் சுற்றுலா விசா வழங்க ஆரம்பிக்கும் போது முதல் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வாங்காமல் விசா வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சலுகை அறிவித்த பின்னர் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் மத்திய அரசு இதற்காக 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யும் என தெரிவித்துள்ளார்.