தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி & சேலை – டெண்டர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி & சேலை - டெண்டர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி & சேலை - டெண்டர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி & சேலை – டெண்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக அரசால் வேட்டி,சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி,சேலைகள் வழங்க பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் தை முதல் நாளன்று பொங்கல் பண்டிகை தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் ஏழை எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும்.

அதன் தொடர்ச்சியாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வேட்டி,சேலைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை 1983ம் ஆண்டு முதல் அரசு வழங்கி வருகிறது. மேலும் இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெரும் பலன் அடைவார்கள். இந்த நிலையில் வர இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆக. 31 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் – விதிமுறைகள் வெளியீடு!

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தின் கீழ் 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்க உள்ளது. இந்த வேட்டி, சேலைக்கான பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. இதற்கு வருகிற செப்டம்பர் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பால் 15000 கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 54000 விசைத்தறி நெசவாளர்கள் உட்பட மொத்தமாக 69000 பேர் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு விரைவில் இலவச வேட்டி,சேலைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!