பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் – புதுவை அரசு அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் - புதுவை அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் - புதுவை அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் – புதுவை அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பள்ளிகள் அனைத்து தொடங்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச நல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

நலத்திட்டங்கள்:

இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகு நடப்பு ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படத்தொடங்கி உள்ளன. கடந்த மூன்று வருடங்களாக பள்ளிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மத்திய அரசு ஒரு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இடைவெளிவிட்டு உட்கார வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பணத்திற்கு பதிலாக இலவச சீருடை வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது, புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு புத்தகங்கள் அச்சிட அரசு அச்சத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

புதுச்சேரியில் கடந்த முறை பள்ளி மாணவர்களுக்கு சீருடைக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை சீருடையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சுதானா நகரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார்கள், ஜெனரேட்டர், மின்மாற்றி மற்றும் சுற்றுச்சுவர் ஆகிய பணிகளை உள்ளடக்கிய குடிநீர் திட்டம் ரூ.13 கோடியே 25 லட்சத்துக்கு மதிப்பீடு செய்யப்பட்டு முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசாங்கத்துக்கு சொந்தமான காலியிடம் கண்டறியப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அங்கு நூலக கட்டிடம் அமைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!