10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவரா நீங்கள்? கொடைக்கானலுக்கு இலவச சுற்றுலா போகலாம்!
கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் சுதீஷ் என்பவர் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கொடைக்கானலில் இலவச சுற்றுலா மற்றும் தங்கும் வசதியினை அறிவித்துள்ளார்.
இலவச சுற்றுலா:
ஜூலை 14ம் தேதி கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவான்குட்டி மாநிலத்தின் 10ம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டார். மொத்தம் 4.2 லட்சம் மாணவர்கள் இந்த வருடம் 10ம் வகுப்பு முடித்திருக்கின்றனர். 99.47% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கேரள கல்வி அமைச்சர் தேர்வுகள், மாணவர்களை தயார்படுத்துவதற்கும், உங்கள் திறமைகளை சோதிப்பதற்காகவும் இல்லை. இதில் தோல்வியடைந்தாலும் மற்ற வெற்றிகள் அனைத்தும் உங்கள் அருகில் தான் இருக்கும் என்று கூறினார்.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – HD புகைப்படங்களை சேர் செய்யலாம்!
இந்நிலையில், 2006ம் ஆண்டு முதல் கொடைக்கானலில் வசித்து வரும் கோழிக்கோட்டில் உள்ள வதகராவைச் சேர்ந்த சுதீஷ் என்பவர் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஒரு சலுகையை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த இளம் மாணவர்களுக்கு தார்மீக ஆதரவை விரிவுபடுத்தும் விதமாக இலவச சுற்றுலா வசதிகளை வழங்க உள்ளதாக அறிவித்தார்.
10ம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இரண்டு நாட்கள் தங்குவதற்கான வசதிகளையும் வழங்க உள்ளார். மாணவர்கள் பள்ளி தேர்வில் தோல்வியுற்றதைக் காட்டும் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும். இவர், மலைப்பகுதிகளில் தி ஹம்மாக் ஹோம் ஸ்டேஸ் மற்றும் பிற தொழில்களையும் செய்து வருகிறார். இந்த சலுகை ஜூலை இறுதி வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பான செய்திகளை அவர் தனது சமூக ஊடக கணக்கின் மூலமாக வெளியிட்டார். அதில் இருந்து இவரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது என்று அவர் செய்தியாளர் ஒருவரிடம் பகிர்ந்துள்ளார்.