தமிழக பேருந்துகளில் இன்று முதல் இலவச பயணம் – போக்குவரத்து கழகம்!
தமிழக நகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் அவர்களின் உதவியாளர் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் இன்று முதல் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இலவச பயணம்:
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 1 மாத காலத்திற்கு பின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 21ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 21ம் தேதி அன்று 1,792 பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகை – அரசு அறிவிப்பு!
மேலும் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பேருந்துகளில் கூடுதலாக மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு பேருந்தில் முகக்கவசத்துடன் 30 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக நகர பேருந்துகளில் இன்று (ஜூன் 23) முதல் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர் மற்றும் திருநங்கைகள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக கட்டணம் எதுவும் வாங்காமல் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு என்று தனியாக பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இதற்காக அவர்கள் அரசு வழங்கிய தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.