தமிழகத்தில் மினி பேருந்துகளிலும் இலவச பயணம்? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில், மினி பேருந்துகளில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இலவச பேருந்து கட்டணம்:
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசாணையை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி பேருந்துகளில் திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிப்பவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தார்.
இந்தியாவில் ஒரே நாளில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று – 1,167 பேர் பலி!!
இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண பேருந்துகளை பிங்க் நிறத்தில் மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பெண்கள் இலவச பேருந்துகளை எளிதாக அடையாளம் காணலாம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பேருந்து சேவை 1 மாதமாக நிறுத்தப்பட்டு, நேற்று முதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் 50 சதவிகிதம் இயக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசம் என அறிவித்து, மினி பேருந்துகளில், அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெண்கள், முதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மினி பேருந்துகளில் ரூபாய் 13 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ விற்பனை, பழ விற்பனை செய்யும் முதியோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் மினி பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஒயிட் போர்டு பேருந்துகளில் மட்டும் இலவசமாக பெண்கள், முதியோர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது போல, மினி பேருந்துகளிலும் கட்டண சலுகை வழங்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.