தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று பல்வேறு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இலவச பயணம்:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பள்ளிகளில் இலவச கல்வி, மாதந்தோறும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கு 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 4% ஆக உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களிலும் இவர்களுக்கு சம வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து தற்போது அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளும் மற்றும் அவர்களின் உதவியாளர்களும் அவர்களின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாகவோ அல்லது சலுகையுடன் பயணிக்க நடத்துனர்கள் அனுமதிக்கவில்லை என்று மனு அளித்துள்ளனர். தற்போது இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.9,153/- ஊக்கத்தொகையில் வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள்..!
இந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாநகர் போக்குவரத்து கழகம் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும்போது நடத்துனரிடம் தங்களின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டை வழங்கி இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அனைத்து பேருந்து நடத்துனர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை கட்டாயமாக அனைத்து நடத்துனர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.