தமிழக அரசு பேருந்துகளில் அனைவருக்கும் இலவச பயணம் – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
இலவச பயணம்:
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு சில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தது. இதில், அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவச கட்டணம் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளை பெற்றிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமைத் தாயகம் என்ற அமைப்பு சார்பில் ‘சென்னை தூய காற்று செயல் திட்டம்’ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாமக தலைவர் அன்புமணி, தேர்தல் பணிக்குழுத் தலைவர் ஏ.கே.மூர்த்தி, பசுமைத் தாயகம் அமைப்பு செயலர் இரா.அருள், இணைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய அன்புமணி, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பாமக ஏற்படுத்தி வருகிறது.
தமிழக பேருந்து பயணிகளுக்கு ஷாக் நியூஸ் – இனி இதற்கெல்லாம் தடையா?
காற்று மாசுபாடால் உலக அளவில் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சென்னையில் மட்டும் இந்த எண்ணிக்கை 11 ஆயிரமாக உள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசப் பேருந்து பயணம் என்ற திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். இப்போது அரசுப் பேருந்துகள் நவீனமாக இருந்தால் மக்கள் அதை பயன்படுத்துவார்கள். அப்படி பொது போக்குவரத்தை பயன்படுத்த துவங்கும் போது வாகனங்களின் பயன்பாடு குறையும். விபத்துகளும் குறையும். மேலும் சென்னையில் தூய காற்று செயல் திட்டத்துக்கான நகலை கொடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்’ என்று பேசியுள்ளார்.