SSC மற்றும் TNPSC போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி – மாவட்ட நிர்வாகம்!
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுடையவர்கள் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி :
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு சேருவதற்கு தமிழ்நாடு பணிகள் தேர்வாணையத்தால் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தி முறையாக பணி ஆணை வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தும் கான்ஸ்டபிள், பார்டர் போலீஸ், மத்திய தொழிற்படையினர், இந்தோ தைபன் பார்டர் போலீஸ் உள்ளிட்ட 25,271 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஆகஸ்ட் 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளமையாலும் தேர்வின் தேதி அறிவிக்கப்ட்டுள்ளமையாலும் வரும் செப்டம்பர் 6 ம் தேதி மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்கள் பெயரை 9499055944 அல்லது 0421-2999152 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.