மீண்டும் ரயில் கட்டண சலுகை அறிமுகம்? மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்!
ரயில் பயணங்களின் போது மாற்றுத்திறனாளிகள், ஊனமுற்றவர்கள், முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கட்டண சலுகை
பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் என பலருக்கும் ரயில் கட்டணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சலுகையை ரயில்வே நிர்வாகம் கொடுத்து வந்தது. இந்த கட்டண சலுகையானது கடந்த ஆண்டு உருவான கொரோனா பேரலை காலத்தில் நிறுத்தப்பட்டது. அதாவது நோய் தொற்று காலத்தில் ரயில்களின் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்ததாலும், மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாலும் இத்தகைய சலுகைகள் நிறுத்தப்பட்டது.
தடுப்பூசிகள் டெல்டா வகை கொரோனா தொற்றை தடுக்காது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில் நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டுமாக அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற அவையில் தெரிவித்துள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், ‘இந்திய ரயில்வே சேவைகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள், போரில் கணவரை இழந்த பெண்கள், விருது பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில் கட்டணத்தில் இருந்து சலுகைகள் அளிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் ரயில்களில் பயணம் செய்யும் முதியோர்களுக்கும் கட்டணத்தில் இருந்து 50% அளவு குறைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா பெருந்தொற்றால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்ற பிரிவினருக்கு கட்டண சலுகைகள் நிறுத்தப்பட்டது. இந்த செயல்பாடுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.