திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் இலவச டோக்கன்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் இலவச டோக்கன்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் இலவச டோக்கன்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் இலவச டோக்கன்!

தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தற்காலிகமாக இலவச டிக்கெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்ததும் இலவச டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், படிப்படியாக அனைத்து சேவைகளும் துவங்கப்பட்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் கோவிலுக்குள் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த மாதத்தில் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 22.62 லட்சம் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், இந்த ஒரு மாதத்தில் மட்டுமே ஒரு கோடியே 86 லட்சம் லட்டுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

இதனையடுத்து 10.72 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முடி காணிக்கை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். தற்போது வரைக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

Exams Daily Mobile App Download

கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இலவச டிக்கெட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் இலவச டிக்கெட் சேவைகள் துவங்கப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி அறிவித்துள்ளார். மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 4.150 கிலோ எடையில் 2.45 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை தானமாக கொடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!