திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!
கொரோனா தாக்கத்தை தொடர்ந்து கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுகிறது.
திருப்பதி கோயில்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. இருப்பினும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டது. தளர்வுகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு பணியாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 295 பேர் உயிரிழப்பு!
தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வெளிமாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொது சேவை மையம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் இரவு 9:30 மணி வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு கோயில் கதவுகள் அடைக்கப்படும் என கூறியுள்ளனர். இலவச தரிசனத்தில் 2 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆதார் அட்டையை காண்பித்து தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.