திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் நிறுத்தி வைப்பு – கொரோனா எதிரொலி!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இலவச தரிசனம்:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அங்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் முதல் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் என வரிசைப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் திருப்பதியில் உள்ள உள்ள நிர்வாக அலுவலகத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஜவகர் ரெட்டி கூறுகையில், திருப்பதி தேவஸ்தானத்தின் துணை கோயில்களுக்கு திரளான பக்தர்கள் நன்கொடையாக விவசாய நிலங்களை வழங்கியுள்ளனர்.
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!
அதனை பயன்படுத்தி இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், அந்த நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யும் பொருள்களை தேவஸ்தானம் விலைக்கு வாங்கி அதனை ஏழுமலையான் நெய்வேத்தியத்திற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் துணை கோயில்களான அப்பலயகுண்டா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசமங்காபுரம் சீனிவாச பெருமாள் கோவில் ஆகிய இரு கோயில்களிலும் பல பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
அந்த துணை கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும், பசு மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பால் சேகரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட கோவிலுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மூன்றாம் அலை எச்சரிக்கை இருப்பதால் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தற்போதைக்கு இலவச தரிசனம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.