தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் விநியோகம்!
தமிழகத்தில் குமாரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இலவச பாட புத்தகங்கள் :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இடையில் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. அதனால் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லாமல் உள்ளது. அதனால் மாணவர்கள் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் ஆதார் அட்டை பதிவிறக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!
மேலும் இந்த கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாட வாரியாக தனித்தனி ஆசியர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. புத்தகங்கள் ஆன்லைன் வகுப்பிற்கு அவசியமாகிறது. அதனால் மாவட்டம் தோறும் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு அரசின் இலவச பட புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1,59,616 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று மாணவ மாணவிகள் ஏராளமானோர் இலவச பாடப் புத்தகங்களை பெற்றுச் சென்றனர். இதே போல் தனியார் பள்ளிகளிலும் பாடப்புத்தகங்கள் விநியோக பணி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது.