தமிழக தனியார் பள்ளிகளில் 2022-23ம் ஆண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2022-23ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 155 பள்ளிகளில் 1817 மாணவர்களை சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வரவேற்பு:
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுகான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 155 பள்ளிகளில் 1817 மாணவர்களை சேர்க்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேருவதற்கு அதற்குரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த சலுகையை பெற மாணவர்களின் பள்ளிக்கும் வீட்டிற்கும் 1 கிமீ இடைவெளி இருக்க வேண்டும்.
Jio, Airtel, Vi பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பெஸ்ட் ஹெவி டேட்டா திட்டங்கள்!
மேலும், ராமநாதபுரம்,பரமக்குடி, மற்றும் மண்டபம் கல்வி மாவட்டங்களில் வட்டாரக் கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள், அரசு சேவை மையங்கள், மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இந்த சலுகை பெற விண்ணப்பிக்க குழந்தையின் புகைப்படம், சாதி சான்று, பிறப்பிட சான்று, தாய் மற்றும் தந்தையின் ஆதார் அட்டைகள் ஆகியவை பதிவேற்றம் செய்ய வேண்டும். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உடன் இணைத்து பதிவேற்றம் செய்வது அவசியம் ஆகும். மேலும் விண்ணப்பிப்போர் குடும்ப வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.