தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை:
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மாணவர்கள், பழங்குடியினர் போன்ற மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கல்வி பயில உதவித் தொகைகள் வழங்கி வருகின்றன.
கடந்த வருடம் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறுபான்மையின மாணவர்களுக்கான இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜைன மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
நடப்பு கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் 1ம் வகுப்பு முதல் 10 மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்கி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் நவம்பர் 15ம் தேதி வரையிலும் உயர்கல்வி பயில்வோர் நவம்பர் 30ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – அரசு உத்தரவு!
புதிதாக விண்ணப்பிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்க அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை தொடர்பான விவரங்களை www.minorityaffairs.gov.in/