தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச வேஷ்டி, சேலை அனுப்பும் பணிகள் துவக்கம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இலவச வேஷ்டி, சேலை அனுப்பும் பணிகள் துவக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இலவச வேஷ்டி, சேலை அனுப்பும் பணிகள் துவக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச வேஷ்டி, சேலை அனுப்பும் பணிகள் துவக்கம்!

தமிழகத்தில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலவச வேஷ்டி சேலை:

தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை ஆகியவை வரும் ஜனவரி 3ம் தேதி ரேஷன் கடை மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு உட்பட பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, ஏலக்காய் 10 கிராம், திராட்சை தலா 50 கிராம், பாசி பருப்பு அரை கிலோ, ரவை ஒரு கிலோ, மல்லி தூள், நெய், கடுகு, சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, கடலை பருப்பு 250 கிராம், கோதுமை ஒரு கிலோ, புளி 250 கிராம், உப்பு ஒரு கிலோ ஆகிய 21 வகையான பொருட்கள் துணி பையில் போட்டு பாதுகாப்பாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் நாளை (டிச.30) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்பட மாட்டாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் மக்களிடையே அதிக ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்க்கான முன்னேற்பாடுகள் தமிழக அரசால் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

முதற்கட்டமாக திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி, சிலுவத்தூர், திண்டுக்கல் கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் 76,363 வேஷ்டிகளும், 76,314 சேலைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாகனங்கள் மூலம் அந்த அந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பு வந்தவுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாட்களில் ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களிடையே மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!