ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் – 150 கிலோ இலவச அரிசி.. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக 150 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அம்மாநில அறிவித்துள்ளது. இந்த நலத்திட்டத்தின் கீழ் பயனடைய சில நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது.
இலவச அரிசி
நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பாக அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதே போல மாநில அரசுகளும் அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கியது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ வரை அரிசி இலவச வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் பணவீக்கம் அதனால் அதனால் உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிபிஎல் கார்டு அதாவது முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 15 முதல் 150 கிலோ வரை இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச அரிசியை பெற விரும்புபவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.