மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் ரத்து? செலவீனத்துறை எச்சரிக்கை!
கொரோனா கால கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு மத்திய அரசால் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை நீட்டிக்க கூடாது என்று செலவினத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஏழை எளிய மக்கள் அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசால் பிரதான் மந்திரி கரீப் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலமாக இலவசமாக உணவு தானியங்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது இத்திட்டம் செப்டெம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
Common Wealth 2022: ஊக்க மருந்து விவகாரம் – தமிழக தடகள வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!
அதனால் இதற்காக ரூ.2.07 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வரை அரசுக்கு செலவினம் ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் என்று செலவீனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக செலவீனத்துறை வெளியிட்ட அறிக்கையில், பிரதான் மந்திரி கரீப் யோஜனா திட்டத்தை நீட்டிப்பு செய்வது மத்திய அரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. அதனால் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் சிலிண்டருக்கான மானியம் வழங்க உள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் வரி குறைப்பு, சமையல் எண்ணெயில் சுங்க வரி குறைப்பு என அனைத்தும் மத்திய அரசின் நிதிநிலை மோசமடைய செய்யும் என்று எச்சரித்துள்ளது. அதனால் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் விரைவில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.