தமிழக அரசின் இலவச பொங்கல் வேட்டி, சேலை – தொழிலாளர்களின் கோரிக்கை!

0
தமிழக அரசின் இலவச பொங்கல் வேட்டி, சேலை - தொழிலாளர்களின் கோரிக்கை!
தமிழக அரசின் இலவச பொங்கல் வேட்டி, சேலை – தொழிலாளர்களின் கோரிக்கை!

தமிழக அரசு பொங்கல் வேட்டி, சேலைக்கான ஆர்டரை இன்னும் வழங்காத நிலையில், விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அரசின் முடிவு குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலவச வேட்டி,சேலை:

தமிழக அரசு 1981 ஆம் ஆண்டு முதல் பொது விநியோக அமைப்புகள் (PDS) மூலம் இலவச சேலைகள் மற்றும் வேட்டிகளை வழங்கி வருகிறது, இது ஆயிரக்கணக்கான விசைத்தறி, கைத்தறி மற்றும் மிதிதறி தொழிலாளர்களுக்கு உதவியுள்ளது. பொதுவாக, அரசு இதற்கான ஆர்டர்களை ஜூலை மாதத்தில் வழங்கும். ஆனால் 2021 இல், ஆர்டர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்கப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் முதல் வாரம் கடந்தும் இதுவரை அரசு உத்தரவு பிறப்பிக்காததால் விசைத்தறி தொழில் துறையினர் கவலையடைந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதுகுறித்து, விசைத்தறி தொழில் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், பொங்கல் விழாவின் போது பொதுவாக தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் மூலம் சுமார் 1.8 கோடி வேட்டிகள் மற்றும் சேலைகள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழ் புத்தாண்டான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி 14 அல்லது 15ம் தேதி வருவதால், தற்போது ஆர்டரை வழங்காவிட்டால் பணிகளை மேற்கொள்ள முடியாது என விசைத்தறி தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, விசைத்தறி உரிமையாளர்கள் நெருக்கடியில் சிக்கித் தொழிலை மூடும் நிலை உண்டானது.  மேலும் சிலர் செலவுகளைச் சமாளிக்க இயந்திரங்களை விற்றுவிட்டனர். ஆனால், அரசு வழங்கிய பணி ஆணை விசைத்தறி தொழிலுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை – அரசு புதிய ஏற்பாடு!இந்நிலையில், தமிழகத்தின் ஈரோடு மாவட்ட விசைத்தறி தொழிலாளி கே.கருணாகரன் ஐஏஎன்எஸ் செய்தியாளர்களிடம், பொங்கல் வேட்டி, சேலைக்கான ஆர்டரை இதுவரை அரசு வழங்கவில்லை, இதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஆகஸ்ட் முதல் வாரமும் முடிந்துவிட்ட நிலையில், இந்த வாரத்தில் கூட தாமதமானால் ஆர்டரை நிறைவேற்றுவது கடினம்.வேறு வழியில்லை. ஆனால், அரசு கவனிக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார். தொழில்துறை வட்டாரங்களின்படி, 1.8 கோடி வேட்டிகள் மற்றும் சேலைகளில், 1.5 கோடி பெட்டிகள் விசைத்தறி துறையில் உற்பத்தி செய்யப்படும், 30 லட்சம் கைத்தறி மற்றும் மிதிதறி துறையில் உற்பத்தி செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!