ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – தேடி வரும் உணவு! இலவச எண் வெளியீடு!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு உணவினை அவர்கள் இருக்கைக்கே கொண்டு தருகிறது. அதற்கான வழிமுறைகள் மற்றும் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
உணவு சேவை:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. இது கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதில் பெரும் பங்காற்றி வருகிறது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் ரயில் மற்றும் விமான சேவைகள் மீண்டும் இயங்கி வருகிறது. இருப்பினும் இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது இந்திய ரயில்வே.
TNPSC தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் – இனி முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள்!
இது குறித்து இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் இருக்கும் போது, இனி ரயில் பயணத்தின் போது யாருமே பசியோடு செல்ல வேண்டியது இருக்காது. நீண்ட பயணமோ, குறுகிய பயணமோ, உங்கள் ரயில் பயணத்தின் போது மிக எளிதாகவே உணவை ஆர்டர் செய்து பெற முடியும். அதுவும் உங்கள் இருக்கைக்கே வந்து சேரும். இதற்காக ரயில் பயணிகள் ரயில்வேயின் இணையதளத்தை பயன்படுத்தலாம் எனவும் கூறி இருந்தது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி இல்லை? பொதுமக்கள் அதிர்ச்சி!
அதேபோல் ஐஆர்சிடிசியின் இணைய உணவு வழங்கலுக்கான ஐஆர்சிடிசி புட் ஆன் டிராக் என்னும் செயலியை டவுன்லோட் செய்து பிடித்தமான உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது இதற்கு மாற்று வழியாக 1323 என்னும் இலவச எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்தபடியே உணவு பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. பல்வேறு வசதிகளை தொடர்ந்து உணவு வழங்கும் சேவையை ரயில்வே நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.