தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்திற்குள் இலவச நோட் புக்? கல்வித்துறை அறிவிப்பு!
எப்போதுமே பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும்போதே இலவச நோட் புக் வழங்கப்பட்டுவிடும். ஆனால், தற்போது இந்த மாத இறுதிக்குள் இலவச நோட் புக் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இலவச நோட் புக்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களும் பொதுத்தேர்வுக்கு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆரம்பத்தில் இருந்தே மாணவர்களின் கல்வித்திறனில் ஆசிரியர்கள் அக்கறை கொண்டு விளங்கி வருகின்றனர். இதனையடுத்து, எப்பொழுதுமே மாநிலப் பாடத்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
எப்பொழுதும், பள்ளிகள் திறக்கும்போதே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். ஆனால், இந்தாண்டு கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. அதாவது, மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி அளிக்க 2 வரி நோட்டு, 4 வரி நோட்டு, நோட்டுகள், கட்டுரைப் பயிற்சி ஏடு, வடிவியியல் நோட்டு, கிராப் நோட் ஆகிய நோட்டு புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக கிட்டத்தட்ட 3 கோடி நோட்டு புத்தகங்களை அச்சிடும் படி பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை? புதிய அறிவிப்பு!
மேலும், இந்த 3 கோடி நோட்டு புத்தகங்களில் 75% நோட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நோட்டு புத்தகங்கள் விரைவில் அச்சிடப்படும் எனவும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.