தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி – பள்ளி கல்வித்துறை உத்தரவு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை மாணவர்களை நேரடியாக பள்ளிகளுக்கு வரவழைத்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு ஆதார் கார்டின் மூலம் 18 சிம்கள் வாங்கலாம் – முழு விபரம் இதோ!
மேலும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்கள் நேற்று (ஜூன் 22) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்கள் வெளியிட்ட உத்தரவில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளது. மேலும் இதனை மாணவர்களை நேரடியாக பள்ளிகளுக்கு வரவழைத்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.