இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – இலவச Smart phone, Laptop…அரசின் அட்டகாசமான அறிவிப்பு!
மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உத்திரபிரதேச மாநில அரசு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இலவசமாக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்களை பெறலாம். இது குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
இலவச லேப்டாப்:
இன்றைய நவீன உலகில் நடுத்தர வர்க்கத்தினர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரது வீடுகளிலும் தற்போது லேப்டாப், கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்கள் உள்ளது. கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இத்தகைய சாதனங்கள் வாயிலாக தான் கல்வியை கற்று வந்தனர். அப்போது அரசு பள்ளியில் பயிலக்கூடிய ஏழை மாணவர்கள் மற்றும் பிற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களால் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளை வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் அவர்கள் ஊரடங்கு காலத்தில் கல்வி கற்பதில் தொய்வு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு உத்திரபிரதேச அரசு கல்வித்துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கவும் ஏழை, எளியோரிடமும் இத்தகைய சாதனங்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் இலவச டேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனை பெற விரும்புவதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தில் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் அதிகரிக்கும் வேலையிழப்பு.. 385 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்யும் Vedantu!
Exams Daily Mobile App Download
மேலும் விண்ணப்பிக்கும் நபர் முதுகலை பட்டப்படிப்பு அல்லது மருத்துவ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தகுதியுடையவர்கள் up.gov.in என்ற இணையதளத்தில் ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ், புகைப்படம், வசிப்பிட சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.