தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘லேப்டாப்’ – அமைச்சர் அறிவிப்பு!!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' - அமைச்சர் அறிவிப்பு!!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'லேப்டாப்' - அமைச்சர் அறிவிப்பு!!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘லேப்டாப்’ – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே இலவச ‘லேப்டாப்’ (மடிக்கணினி) வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

இலவச லேப்டாப்:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி உரிய இணைய வசதியுடன் இருப்பது அவசியம் என்பதால் வசதி குறைந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளில் உள்ள சிக்கல்களை போக்க லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

டிசம்பர் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ஏற்கனவே 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!