20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச அதிவேக இணைய சேவை – அரசின் புதிய திட்டம்!
தனியார் நிறுவனத்திற்கு போட்டியாக துவங்கப்பட்டுள்ள கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க் இணைய சேவையின் மூலமாக 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிவேக இணைய சேவை
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக கேரள அரசு கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க் என்கிற அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையின் மூலமாக 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தவிர நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு குறைவான விலையில் இந்த சேவை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன். 16 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
அதாவது, கேரளா மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் செலவில் 35,000 கிலோ மீட்டர் துாரத்திற்கு பைபர் ஆப்டிக் கேபிள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், தங்கு தடையற்ற அதிவேக இணைய சேவையை பெற்றுக்கொள்ள முடிகிறது. மேலும், இதில் முதற்கட்டமாக 30,000 அரசு அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 20 Mbps வேகத்தில் 3000gb டேட்டா மாதத்திற்கு ரூ.299க்கும், 6 மாதத்திற்கு ரூ.1794க்கு என பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.