இலவச கேஸ் சிலிண்டரை பெறுவது எப்படி? உடனே விண்ணப்பிக்கவும்! முழு விவரங்களுடன்!
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை சார்ந்த பெண்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக இலவச சிலிண்டர் இணைப்புகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இலவச சிலிண்டர் இணைப்புகளை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான தகவலை கீழே காணலாம்.
இலவச கேஸ் சிலிண்டர்:
மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த அனைத்து பெண்களும் உஜ்வாலா திட்டத்தின் மூலமாக இலவச சிலிண்டர் இணைப்புகளை பெற்று பயன்பெறலாம்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புகார் அளிப்பது எப்படி?
இந்த இலவச சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் பெண் 18 வயதை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே போதுமானது. மேலும், இலவச சிலிண்டரை பெற ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும். மேலும், இலவச சிலிண்டர் இணைப்புகளை பெற https://www.pmuy.gov.in/index.
Exams Daily Mobile App Download
பின்பு அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். விண்ணப்பம் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்பு உங்களுக்கான சிலிண்டர் இணைப்பு சேவைகளை வழங்குவதற்கான பணி தொடங்கப்படும். சமையல் எரிவாயுவின் விலை ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு பெருகி கொண்டு செல்வதால் இந்த இலவச கேஸ் இணைப்புகள் மக்களுக்கு மிகவும் நன்மையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.