இல்லத்தரசிகளுக்கு வரவுள்ள குட் நியூஸ்.. அதிகரிக்கப்படும் மானியம்? இலவச சிலிண்டர் – பட்ஜெட் 2023!!
நாளை (01.02.2023) தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களுக்கான இலவச மானியம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் 2023:
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாளை (பிப்ரவரி 01) 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான வழிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடியாக 6 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் – Philips நிறுவனம் முடிவு!!
அதே சமயம் நாட்டில் உள்ள இல்லத்தரசிகளின் கோரிக்கையான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016 ஆண்டு இத்திட்டம் தொடக்கப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு உஜ்வாலா 2.0 செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.5812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் இந்த இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் தொடரும் என கூறப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சென்றடையும்படி இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 12 சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.