தமிழகத்தில் தளர்வுகள் உடன் ஊரடங்கு அமல் – ஜூன் 21 வரை இலவச உணவு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவில்லாதோர்க்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஜூன் 21 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இலவச உணவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மாதம் மே 10 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து சிரமப்பட்டனர். ஏழை மக்கள், கூலி தொழிலாளர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்தனர். பலரும் உணவில்லாமல் பசியால் வாடினர். இந்த ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பல தனிநபர்கள், குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினமும் ஏழை குடும்பங்கள், சாலையோர மக்களுக்கு உணவளித்து வந்தனர்.
உலகிலேயே மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு – ஏலம் விட முடிவு!
அரசு சார்பில் அம்மா உணவகங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு மூன்று வேலை இலவச உணவு வழங்கப்பட்டது. இந்த பெருந்தொற்று காலத்தில் மக்கள் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக அரசு தொண்டு நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தோர் மனிதாபிமான அடிப்படையில் கருணை உள்ளத்தோடு இலவசமாக உணவுகளை வழங்கினர். தொற்று பரவல் குறையாத காரணத்தால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் ஏழை மக்களுக்கு உணவுகள் கிடைத்தது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்து கோயில்கள் முலமாக ஏழை எளிய மக்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் உணவு தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஜூன் 21 வரை அமலில் உள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகம் உள்ளதால் அங்கு குறைவான தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அந்த 11 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மற்றும் பிற மக்களுக்கும் ஊரடங்கு நிறைவடையும் ஜூன் 21ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.