தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழக அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள், அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேர்ந்தால் அவர்களது மொத்த கல்விக் கட்டணத்தையும் அரசு ஏற்கும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பு
கொரோனா 2 ஆம் அலைத்தொற்று தமிழகம் முழுவதும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கிட்டத்தட்ட 20 நாளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவ படிப்புகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
ரேஷன் கார்டில் நீக்கப்பட்ட பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
அதே போல பொறியியல் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில், 7.5% இடஒதுக்கீட்டில் இடம்பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என பொறியியல் மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா – 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை!
இது தொடர்பாக பேசிய முதல்வர் ‘தமிழகத்தில் பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற பலரது கனவுகளை அடைந்து கொள்ளும் நாள் இன்று. அதாவது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் இடஒதுக்கீடு அடிப்படையில், பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களின் மொத்த கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும். அனைவருக்கும் கல்வி என்பது நமது அரசின் நோக்கமாகும். அதனால் 7.5% இடஒதுக்கீட்டில் இடம் பெறும் மாணவர்களது கட்டணத்தை அரசே செலுத்தும்’ என அறிவித்துள்ளார்.