தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. நவ.11 முதல்வர் துவக்கி வைப்பு!

0
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. நவ.11 முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. நவ.11 முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. நவ.11 முதல்வர் துவக்கி வைப்பு!

தமிழக முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த அனைத்து விஷயங்களையும் படிப்படியாக நிறைவேற்றி வரும் நிலையில், தற்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலவச மின்சாரம்:

தமிழக அரசு பொறுப்பில் இருக்கும் திமுக தனது ஆட்சி அமலுக்கு வந்த உடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற தொடங்கியது. இதைத்தவிர அரசு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பல அதிரடி நடவடிக்கைகளையும் செய்தனர். அதன்படி, பல மாற்றங்களையும் மின்சாரத்துறையில் செய்தனர். முந்தைய ஆட்சி காலத்தில் இருந்த பல விஷயங்கள் குறித்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, மின் இணைப்பு வேண்டி அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும், மின் இணைப்பு தொடர்பாக வரும் புகார்களுக்கு அதிகாரிகள் விரைந்து பதில் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பது மற்றும் மானியம் அளிப்பது குறித்த அறிவிப்புகளும் வெளியிப்பட்டது.

GST வரி செலுத்துவதில் புதிய விதியை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு – முக்கிய விவரங்கள் இதோ!

Exams Daily Mobile App Download

மொத்தம் 4.5 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான கணக்கின் படி, வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்தை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!