தமிழகத்தில் இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட் தாக்கல்!
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரண்டாம் நாளாக அறிவிக்கப்பட்டு வருகிற வேளாண் துறைக்கான புதிய பட்ஜெட்டில் நீர் பாசனத்துக்கான இலவச மின்சார திட்டத்தின் கீழ் ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இலவச மின்சாரம்:
கடந்த மே மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான அரசின் புதிய பட்ஜெட் அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி வேளாண் துறைக்கான 2021-22 ஆம் ஆண்டின் புதிய திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையை இ-பட்ஜெட்டாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் தமிழக வேளாண் துறையை மேம்படுத்துவதற்கான பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் பயிறு வகைகள் விற்பனை – பட்ஜெட் தாக்கல்!
அதன் படி இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் என்பது முக்கிய காரணியாகும். அந்த வகையில் அனைத்து விளை நிலங்களுக்கும் நீர் பாசனமானது, ஆழ்துறை கிணற்றின் மூலம் எடுக்கப்பட்டு, பம்பு செட்டுகள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மின்சாரம் முக்கியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் தமிழகத்தில் நீர் பாசனத்தை மேம்படுத்துவதற்காக, சுமார் 22,19,000 மின் மோட்டர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பயிற்சாகுபடியின் போது விவசாயிகள் சந்தித்து வரும் சிக்கல்களை கருத்தில் கொண்டு, சராசரியாக ஒவ்வொரு பம்பு செட்டுக்கும் ரூ.20 ஆயிரம் மின் கட்டணத்தை ஆண்டுதோறும் அரசு செலுத்தி வருகிறது. அதன் கீழ் இந்த ஆண்டும் இலவச மின்சார திட்டத்தின் கீழ் ரூ.4508 கோடி தொகை மின்சார வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.