தமிழக அரசு சார்பில் இலவச மின் இணைப்பு – முதல்வர் நாளை தொடக்கி வைப்பு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.
இலவச மின்சாரம்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் விவசாயிகளுக்கும், வேளாண் தொழிலும் தேவையான சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், திய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், வேளாண் இயந்திர உற்பத்தியை அதிகரித்தல், ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் போன்றவை விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!
மேலும் இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் மின் இணைப்பு கோரி காத்திருக்கின்றனர்.
Reliance Jio 336 நாட்கள் வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் பிளான் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் 4.52 லட்சம் விவசாயிகள் புதிய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக தெரிவித்திருந்தார். 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 25,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் நாளை வழங்கவுள்ளார்.