தமிழகத்தில் இலவச கல்வி திட்ட மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இன்று (ஏப்ரல் 20) முதல் தொடங்கியுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்தது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, மற்றும் பிற வகுப்புகளுக்கு ஆண்டுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு தற்போது பல மாநிலங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!
இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர பல நிபந்தனைகள் உள்ளது. அதன் படி பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், வருமான சான்று, சாதி சான்று, மருத்துவமனை சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் அவசியமாகும். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – IT நிறுவனங்களில் சூப்பர் வாய்ப்பு!
தற்போது தமிழகத்திலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்(RTE) கீழ் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. rte.t schools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் ஏப்ரல் 20 முதல் மே மாதம் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1,10,000 காலியிடங்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.