தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இலவச கல்வி
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வித்தரத்தை அடிப்படையாக வைத்தே அமைகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வி கொடுக்கும் நோக்கில் அரசு பல சலுகைகளையும் நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஆனால் அனைவருக்கும் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சென்று அடைவதில்லை. அதனால் தகுதியும், தேவையும் இருக்கும் மாணவர்கள் இலவச கல்வி கிடைக்காமல் தனியார் கல்லூரிகளை தேடி செல்கின்றனர்.
அங்கே மாணவர்களின் தேவையை அறிந்து ஒரு சில கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அதனால் ஏழை எளிய மாணவ மாணவிகளின் உயர்கல்வி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஜெயபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றும் வழிமுறைகள் – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
அதில் அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரி குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும், வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் பின்புலத்தை பார்க்காமல் திறமை, கல்வி தகுதி அடிப்படையில் அரசே முழு கல்வி செலவை ஏற்கிறது என தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவதும், அதனை மீறுவோர் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக தமிழக உயர்கல்வி செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்