மத்திய அரசு சார்பில் 63,09,30,270 தடுப்பூசிகள் இலவசமாக விநியோகம் – 4.87 கோடி கையிருப்பு!
கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாநிலங்களின் கையிருப்பில் 4.87 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் தடுப்பூசிக் செலுத்தி கொள்வது முக்கிய பங்கு வகித்தது. நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . அதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனால் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை அதிகரித்தது. அதனை தொடர்ந்து மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Wipro – பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, செப்.15 வரை விண்ணப்பம்!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளின் பேரில் மக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் டெல்டா வைரஸ் பரவி வருகிறது. ஆனால் தடுப்பூசிகள் விளைவால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 63,09,30,270 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் 4,87,39,946 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதனை தொடர்ந்து 21,76,930 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 63.43 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.