திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் – தேவஸ்தான அதிகாரி விளக்கம்!
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களை நேரடியாக வழங்குவது பற்றி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
திருப்பதி தரிசனம்:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருகோயில்களில் கொரோனா பரவல் காரணமாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இது புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவலால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளதால் சற்று கூட்டம் குறைவாகவே இருந்து வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு அக்டோபரில் சம்பள உயர்வு – DA மற்றும் TA நிலவரம்!
தற்போது சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் தினசரி எண்ணிக்கை 30,000 ஆக உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 7 முதல் 15 ஆம் தேதி வரை திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்பதால் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி கோயில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் பிரம்மோற்சவ விழா நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு!
அதனை தொடர்ந்து இலவச தரிசன டிக்கெட்களை நேரடியாக வழங்குவது குறித்து பிரம்மோற்சவ விழாவிற்கு பின்னர் ஆலோசிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போது 300 ரூபாய் தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் பரிசோதனை சான்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.