திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பிப்.16 முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்!
திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக இலவச தரிசன டிக்கெட் இனி நேரடியாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 16 முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் தோறும் திருப்பதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.300 டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி டிக்கெட் விநியோகம் தொடங்கப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!
கொரோனா தாக்கத்தால் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அரசின் முயற்சிகளிலும், மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் வழக்கம் போல மாதாந்திர முக்கிய பூஜைகள் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏகாதசி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கலெக்டர்கள் உத்தரவு!
இந்த நிலையில் இனி திருப்பதி ஏழுமலையானை தரிக்க வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரடியாக விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிந்துள்ளது. மேலும் தினசரி 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.