இனி நுகர்வோருக்கு 3 LPG சிலிண்டர்கள் இலவசம் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
கோவாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலின் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு ஆண்டிற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதி:
நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல் 5 மாநிலங்களில் நடக்க இருக்கிறது. இதனால் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் போட்டியிட உள்ள கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றது. இந்த முறை பாஜக கட்சி கடலோர மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!
கோவாவின் தலைநகரான பனாஜியில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் நடக்கையில் முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில், தேர்தல் அறிக்கையில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், இதற்கு முந்தைய தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதற்கான அறிக்கையை அரசு முன்னதாகவே வெளியிட்டுள்ளது.
LIC ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்…!
இந்நிலையில், பிப்ரவரி 14ம் தேதி கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்த மாட்டோம் என்றும், பயனர்களுக்கு வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.