11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம் – முதல்வர் தொடங்கி வைப்பு!
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு முதல்வர் சைக்கிள்களை வழங்கியுள்ளார்.
இலவச சைக்கிள்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் பல வித திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரைக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நோட்புக், இலவச காலணிகள், புத்தக பை, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச பயண அட்டை ஆகிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு படிக்க இருக்கும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் காலை உணவு திட்டமும் கூடிய விரைவில் அமல்படுத்த இருக்கிறது. இது மட்டுமல்லாமல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போதுமே பள்ளி ஆரம்பமாகி சில நாட்களிலேயே இலவச சைக்கிள் வழங்கப்பட்டுவிடும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 15ம் தேதி விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால், இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுமா என்கிற பேச்சு வார்த்தையும் வந்தது. இதற்கு பிறகு அனைத்து பள்ளிகளுக்கும் சைக்கிள் உதிரி பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு சைக்கிள்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அதாவது, கொளத்தூர் தொகுதியில் உள்ள 1,546 மாணவர்களுக்கு ரூ.78.30 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை முதல்வர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.