மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு பிப்.1 முதல் இலவச பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பிப்.1 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்புகள்:
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பு தகுதியிலான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. அதற்கான பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற பிப். 1 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த போட்டித் தேர்வுகளில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்றவர்களுக்கு இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – பிப். 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!!
தேர்வுக்கான பாடத்திட்டத்தில் உள்ள பிரிவுகளுக்கான வகுப்புகளும், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் தமிழ் மாணவர்கள் அதிகம் இல்லாத காரணத்தால் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியை தமிழக அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.