TNUSRB தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆணையத்தின் சார்பாக நடைபெறும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்புகள்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வாளர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் 2-ம் நிலைக் காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பான கல்வியாளர்களை கொண்டு இந்த பயிற்சி முகாம்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,552 காவலர் காலிப் பணியிடங்கள் குறித்தான அறிவிப்பையும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Deputy Manager ஆக பணிபுரிய வாய்ப்பு – ஆகஸ்ட் 30 விண்ணப்பிக்க இறுதி நாள்!
மேலும், காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், புத்தகங்கள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் ஆகிய விவரங்கள் அனைத்தையும் அதிகாரபூர்வ இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போட்டித்தேர்வு எழுத இருக்கும் விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.