TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பிப்.12 முதல் வகுப்புகள் தொடக்கம்!
தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவி புரியும் வகையில் TNPSC இன் போட்டி தோ்வுக்கான இலவச அறிமுக வகுப்பு தொடங்க உள்ளது என்று காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ். அகாடமி அறிவித்துள்ளது.
இலவச அறிமுக வகுப்பு
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பபட்டு வருகிறது. அரசு பதவிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்களை தயார் படுத்தி கொண்டு வருகின்றனர். அதனால் இவர்களுக்கு உதவு புரியும் வகையில் காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ். அகாடமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறையில் ரூ.62,000 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதில் கூறியதாவது, அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு அரசு பணி கிடைக்கும் வகையில் காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ். அகாடமி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை போட்டி தேர்வுகளில் தேர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தங்களது சேவைகள் அனைத்து மாணவர்களுக்கு கிடைக்கும் வேண்டும் என்று வருகிற பிப்ரவரி 12ம் தேதி அன்று இலவச அறிமுக வகுப்பு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அதன்படி வருகிற சனிக்கிழமை அன்று 9 மணிக்கு அரசு போட்டித் தேர்வுக்கான இலவச அறிமுக வகுப்பு தொடங்க உள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விருப்புமும் தேர்வர்கள் தங்களுக்கான இடத்தை 94426 78741 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் முன்பதிவு செய்து கொள்ளும் மாணவர்களுக்கு 50% ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் வழங்கப்படும் என்றும் அகாடமி அறிவித்துள்ளது