தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் – ஜூன் 21 முதல் விநியோகம்!
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்க வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்க உள்ளதாக மாநகர் போக்குவரத்து மேலாண்மை அறிவித்துள்ளது.
இலவச பயண டோக்கன்
மாநகரப் பேருந்து கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்களும் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் வரைக்கும் பயணம் செய்வதற்கான இலவச பேருந்து டோக்கன்கள் ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!
மாதத்திற்கு 10 டோக்கன்கள் மூத்த குடி மக்களுக்காக வழங்கப்பட உள்ளது. இலவச டோக்கன் மூலமாக மூத்த குடிமக்கள் மாநகர பேருந்து போக்குவரத்தில் இலவசமாகவே பயணித்துக் கொள்ளலாம் என போக்குவரத்து மேலாண்மை அறிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கான இலவச கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகளை 40 மையங்களில் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூன் 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதிதாக பெற விரும்புபவர்கள் குடும்ப அட்டையின் நகலுடன் வயது சான்று, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பயண அட்டையை புதுப்பிக்க நினைப்பவர்கள் முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.