திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. நடப்பு ஆண்டின் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெற்று திமுக தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் தமிழகத்தில் பொறுப்பேற்றது. தமிழகத்தின் புதிய முதல்வராக முக ஸ்டாலின் ஆளுநர் தலைமையில் பதவியேற்றார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – நாளை ஆலோசனை!!
முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற உடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே தமிழகத்தில் உள்ள அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்றும், கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இன்று உலக சைக்கிள் தினம் – சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் இதோ!!
இது போன்ற பல முக்கிய திட்டங்கள் செயல்பாட்டுக்கும் வந்துள்ளது. இன்று திமுக முன்னாள் தலைவர் மு கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 7 புதிய திட்டங்களை முதல்வர் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. அதில் முக்கிய திட்டமான தமிழக அரசுப் பேருந்துகளில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், கொரோனா தொற்றுக்கு எதிராக களப்பணியாற்றி போராடிய காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்குவதாகவும், திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.