60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – மக்களுக்கு வாக்குறுதி!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரத்தில் யோகி அவர்கள் சில வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
இலவச பேருந்து பயணம்
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை கொரோனா வைரஸான ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக அதிகரிக்க தொடங்கியது. அதனால் தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தற்போது இந்தியா முழுவதும் தொற்று பரவல் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் தற்போது தேர்தல் நடைபெறாமல் இருக்கும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிப்ரவரி 10ம் தேதி அன்று முதல்கட்ட தேர்தல் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 24% HRA திருத்தம் & கூடுதல் சலுகை அறிவிப்பு – அரசு அதிரடி!
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பொருட்டு அம்மாநில முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அவர் கூறியதாவது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் இருமுறை ரேஷன் மானியத்தை வழங்கியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாநில பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.