இன்று முதல் மே 26 வரை அரசு பேருந்துகளில் இலவச பயணம் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்சனையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக டெல்லி உள்ளது. அதனால் டெல்லியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளில் இயங்கும் வாகனத்திற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுக செய்ய உள்ளனர். அதன்படி இன்று முதல் 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதனை முன்னிட்டு பயணிகளுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை டெல்லி அரசாங்கம் வெளியிட்டு உள்ளது.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் தற்போது காற்று மாசுபாடு பிரச்சனை பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மற்ற பகுதிகளை விட கூடுதலாக உள்ளது. மேலும் இங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இந்த வாகனத்திற்கு பதிலாக எலெக்ட்ரிக் ரக வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 4 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது? ஊழியர்கள் அகவிலைப்படி கோரி போராட்டம் அறிவிப்பு!
ஆனால் தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் தீ விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாக நடைபெறுகிறது. அதனால் பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதன் காரணமாக மத்திய அரசு பொதுமக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இன்று முதல் 150 எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக டெல்லி அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பில் எலெக்ட்ரிக் பஸ்களில் சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் மற்றும் 10 பேனிக் பட்டன்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்குவதற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் இன்று முதல் மே 26ம் தேதி வரை என 3 நாட்களுக்கு இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் பயணிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் ஆண், பெண் என இருபாலரும் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.