தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் – அமைச்சரின் முக்கிய தகவல்!
தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இலவச பேருந்துகள் அனைத்து பேருந்தை நிறுத்தங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பேருந்து:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதி அளித்தபடி பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெண்கள் பொதுவாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்து வந்தனர். இலவச பேருந்து திட்டத்திற்கு பிறகு பேருத்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு வர இனி ‘தடுப்பூசி’ கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில் இலவச பேருந்துகள் கிராமப்புறங்களில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிற்பதில்லை என்று புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் இது குறித்து பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கிராமப்புற பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்படும் நேரம், வந்து கொண்டு இருக்கும் இடம் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Chennai Bus என்ற புதிய செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னையில் 3454 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எல்லா பேருந்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து எந்த நேரம் வரும் என்பது குறித்து இனி இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். மாணவர்கள் பேருந்தின் படியில் பயணிக்கும் நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.