தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் ஏழை எளிய மாணவர்களின் கல்வி முறையில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் பேருந்துகளில் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவர்களின் இலவச பேருந்து பயண அட்டை குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இலவச பஸ் பாஸ் :
தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த பஸ் பாஸ் வழங்கும் திட்டம் 1996–97ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சிகளிலும் இத்திட்டம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல, தனியார் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த பஸ் பாஸுக்கான செலவு தொகையை போக்குவரத்துக் கழகங்களுக்கு, போக்குவரத்துத்துறை வழங்கி விடுகிறது. ஆண்டுக்கு தோராயமாக 27 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.766 கோடி அரசால் ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளே இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். மேலும் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று படிப்பதற்கு வறுமை ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என்பதால்தான் சத்துணவு, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், லேப்டாப், சீருடைகள், காலணிகள் முதல் கம்பளி சட்டை, மழைக்கால ஆடை, உறை காலணி, கால் உறை என்று பல பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைவு? மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி பஸ் பாஸ் வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த அறிவிப்பால் மாணவர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.