இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு நடவடிக்கை!

0
இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி - மத்திய அரசு நடவடிக்கை!
இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி - மத்திய அரசு நடவடிக்கை!
இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு நடவடிக்கை!

நாடு முழுவதும் உள்ள தகுதியான மக்களுக்கு இன்று (ஜூலை 15) முதல் இலவசமான பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த இலவச கோவிட் பூஸ்டர் டோஸ் அனைத்து பெரியவர்களுக்கும் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பூஸ்டர்

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது, கொரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்த தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2 டோஸ் தடுப்பூசிகளை தாண்டி பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்வதற்கு ஒரு சில மையங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து மத்திய அரசாங்கம் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி, இன்று (ஜூலை 15) முதல் அடுத்து வரும் 75 நாட்களுக்கு சிறப்பு இயக்கத்தின் கீழ் அனைத்து பெரியவர்களும், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இலவச பூஸ்டர் டோஸ்களை அரசு மையங்களில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியா முழுவதும் இதுவரை, 18 முதல் 59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மருந்தை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொருட்கள் வாங்குவதில் சிக்கலா? தீர்வு இதோ!

இந்த நிலையில் மூன்றாம் டோஸ் கொரோனா கவரேஜை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கம், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற இயக்கத்தை அறிமுகம் செய்து இலவச தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெரும்பாலான இந்திய மக்கள் ஒன்பது மாதங்களுக்கு முன் இரண்டாவது டோஸைப் பெற்றனர். இதை தொடர்ந்து ஒரு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் பிற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள், இரண்டு டோஸ்களுடன் முதன்மை தடுப்பூசி போட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடி அளவுகள் குறையும் என்று பரிந்துரைத்துள்ளன. எனவே, இன்று முதல் அடுத்து வரும் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி இயக்கத்தை தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நாட்களில் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு ஜூலை 15 முதல் அரசு தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!